Search This Blog

Tuesday, July 13, 2010

கவி இரவும் நிலவும்

கவி இரவும் நிலவும் 

நிலவும் இரவானதே இங்கே சில 
நிலை பெற்ற மாந்தர் மனத்தால் 

நிற்றலும் கனவு ஆகிபோனதே 
பகலும் இரவாகிபோனதே இங்கு 

நிலையும் இரவாகி போனதே 
நிலவும் கனவாகி போனதே 

நில்லாத நிலவும் இன்று இப்போது 
நிலையறு நிலையில் நின்று போனதே 

நினைப்பதை மறந்து எங்கள் 
நிலை மறந்து வீணில் நின்று போனதே 

நிலவே நிலவே நீயும் நீயும் உன் 
நிறம் கொண்ட குணம் மறந்தது ஏனோ ?

நில்லா மனிதர் பலர் போலே எம்மிடமும் 
நில்லாது போனாயே மனமின்றி குணமின்றி 

நிலைத்தாய் உன் நிலையில் நிலைத்தாய் நீ 
நிலைத்தது நிலைத்தது ஒ நீ இறந்த பின் தானோ ?

நிலை இல் நிலையில் உன் இன் நிலை நான் உன் 
நன்றி மறந்தேனோ ? நன்றி மறந்தேனோ ?

நிலவே நீயும் என்னை போலவே இறந்தாயோ ?
நிலவே நீயும் என்னை போலவே இறந்தாயோ ?

M.venkatesan.M.sc.,M.Phil.,
Lecturer in Mathematics,
Salem-Tamilnadu,
South India.

No comments:

Post a Comment