Search This Blog

Tuesday, July 27, 2010

அடடா அதிகமாய் மழை பொழிகிறதே

அடடா அதிகமாய் மழை பொழிகிறதே
Share
அடடா அதிகமாய் மழை பொழிகிறதே


அடடா அதிகமாய் மழை பொழிகிறதே
அவள் வீடு சென்று இருப்பாளோ இல்லையோ

அவள் தாய் அவளை காணாது துடித்து போய் விடுவாளே
அன்பான மழைத்துளி தானே என்று இருந்து விடமுடியாதே

அன்னத்தின் அழகிய மேனி நோகுமாறு காய்ச்சல் வருமே
அம்பை கொண்டு குத்தியது போன்று மருந்திட வருமே

அன்பான அவள் வருந்துவாளே அடடா என்ன செய்கின்றாளோ?
அன்பு காட்ட என்னக்கு ஆள் இல்லாது போய்விடுமே !

அடடா அவளுக்கு முள் குத்துமே என நினைத்தேன்
அவள் காலுக்கு காலணி அணிந்து இருந்தாள் எனவே

அவள் பொற்பாதம் வலிக்குமே என சற்று கவலை இல்லை
அன்பு அதிகமானால் மன அம்புகள் குத்துகின்றதே!


அவள் வருந்துவாளே
அன்பு அதிகமானால் மன அம்புகள் குத்துகின்றதே!

No comments:

Post a Comment