Search This Blog

Monday, July 26, 2010

என்னவள்

மாலை ஒளி மங்கி நிற்கும் அழகிய வேளை
என் இனியாள் தன் தோழியோடு அழகிய தன்
இல்லம் திரும்ப எத்தனித்த அந்த வேளையில்

இந்த இளம் சூரியன் தன் இனிய தோழியோடு சற்றே
விளையாட நினைத்து இனிமையான மிக மிக
மென்மையான மேல்காற்றை வீச பணித்திட

காற்றும் தன் தோழியோடு விளையாட நினைத்து
சில்லிடும் பனி காற்றை தோகை மயிலின் இனிமையாய்
வீசிட அடடா என்னவளும் தோகை மயில் ஆனாளே !

அந்த அழகிய பூவினங்களும் தன் தோழியின் மீது
மிகுந்த உரிமையோடு சுகந்த நறுமண வாசனை
மிக்க மகரந்த பொடிகளை தூவின மிக அழகாக

வண்டினங்களும் அந்த மகரந்த பொடிகளை
மேலும் உரிமையோடு தன் தோழிக்கு அழகாக
அணிவித்து அழகு பார்த்தது ஆரணங்காய் அவள் !

அடடா சந்திர தோழியும் தன் தோழியுடனான நட்பை
புதுபிக்கவேண்டி தன் இனிய வெண்ணிற மந்திர
கதிர்களை என்னவளின் மேனி நிறம் ஆக்கிவிட்டாளே !

பூவினமும் வண்டினமும் அதன் நட்பினமாம்
புள்ளினமும் கூ கூ கூ என கவிதை பாடி
பண் இசைத்த வேளை பார் போற்றும் நட்பு வேளை ஆனதே !

சந்திர தோழியும்
தன் இனிய வெண்ணிற மந்திர
கதிர்களை என்னவளின் மேனி நிறம் ஆக்கிவிட்டாளே !
மாலை ஒளி மங்கி நிற்கும் அழகிய வேளை
என் இனியாள் தன் தோழியோடு அழகிய தன்
இல்லம் திரும்ப எத்தனித்த அந்த வேளை
நட்பு வேளை

No comments:

Post a Comment